Kollywood Talkies
Natpe thunai
பாண்டிச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் எனும் ஹீரோ ஹிப்ஹாப் ஆதி பிரான்சுக்கு போகும் முயற்சியில் இருக்கிறார் அவரது முயற்சிக்கு அவரது அம்மா கௌசல்யா எதிராக இருக்கிறார். இச்சூழலில் பாண்டி ஏரியாவுக்கு பிரான்ஸ் அரசு சுதந்திரம் தருவதற்கு முன்பு பாண்டி காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியில் ஒரு விளையாட்டு திடலை குறிப்பாக ஹாக்கி விளையாட்டு திடலை அரங்கநாதன் ஐயா எனும் தியாகி, ஹாக்கி விளையாடி ஹாக்கியில் ஜெயித்து பிரெஞ்சுக்காரர்களிடமிருநது அந்த ஊர் மக்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறார். அந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்க்க, பாண்டி விளையாட்டு துறை அமைச்சர் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார். அதை தன் விளையாட்டு திறமையால் தடுத்து அரங்கநாதன் ஐயாவுக்கு பிறகு அவர் மாதிரியே ஊர் மக்களுக்கு எப்படி வழங்குகிறார் ஹீரோ ஆதி என்பதும் அந்த ஊரை சேர்ந்த தன் காதலியை எப்படி கரம்பிடிக்கிறார்? என்பதும் தான் ” நட்பே துணை” படத்தின் கதையும் களமும்!