அனுஷ்கா: படம் தோல்வியடைந்தால் கவலை இல்லை…

நடிகை அனுஷ்கா பெருமை சேர்க்கும் வகையில் பல படங்கள் நடித்து உள்ளார். அதில் பாகுபலி, பாக்மதி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்கள். தற்போது அவர் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.அவர் சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார். ” கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் என்னால் நடிக்க முடியும் என்று பெயர் வாங்கி இருக்கிறேன். இந்த வெற்றிக்கு பின்னணியில் இருப்பது இயக்குனர்கள் தான். நல்ல கதைகளில் என்னை அவர்கள் நடிக்க வைப்பதால்தான் பெயர் வாங்க முடிகிறது.சிறுவயதில் புராண, சரித்திர கதை புத்தகங்ள்,கற்பனை கதைகளையும்  வாங்கி படிப்பேன்.கற்பனை உலகத்தில் வாழ்வேன் அதில் இருந்து மீண்டு நிஜ உலகத்திற்கு வர பிடிக்காது. அது இனிமையான அனுபவம். இதனால் தான் புராண படங்களில் நடிப்பதற்கு எனக்கு தைரியத்தை கொடுத்து உள்ளது . நான் வெற்றியை எதிர்பார்க்க மாட்டேன். கடமையை செய். பலனை எதிர்பாராதே என்பது எனது சித்தாந்தம். படங்கள் தோல்வி அடைந்தால் கவலை இல்லை. கஷ்டப்பட்டு நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.