அரவிந்த்சாமிக்கு ஜோடியாக 4 நாயகிகள்

மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக​ அறிமுகமானவர் அரவிந்த்சாமி, உதிரிப்பூக்கள் மகேந்திரன் இயக்கிய சாசனம் படத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருந்தார். பின்னர், மீண்டும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தவர், மோகன்ராஜா இயக்கிய தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மறுபடியும் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார்.தற்போது அரவிந்த்சாமி, டியர் டாட், போகன், துருவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,செல்வா இயக்கவுள்ள​ ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார் அரவிந்த்சாமி.கமர்சியல் கதையில் உருவாகும் அந்த படத்திலும், நான் அவனில்லை படம் போன்று அரவிந்த்சாமியுடன் 4 நாயகிகள் நடிக்கிறார்கள். அந்த வகையில், இனியா, வேதிகா உள்ளிட்ட சில நடிகைகளிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.