‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் இணையும் நடிகர் விக்ரம்!

நடிகர் விக்ரம், கமல் தயாரிப்பில் உருவான ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தற்போது நடிகர் விக்ரம் ‘மகாவீர் கர்ணா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவாக போய்க் கொண்டிருக்கிறது படத்தை ஆர்.எஸ்.விமல் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் இணையவுள்ளார். இவர் ‘டிமாண்டி காலனி’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நடிகர் விக்ரமை வைத்து உருவாகும் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் நிறைந்ததாக இருக்குமாம். தற்போது இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது.