இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு பதில் யோகிபாபுவை நடிக வைக்க முயற்சி?

வடிவேலுவை கதாநாயகனாக வைத்து ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்க இயக்குனர் ‌ஷங்கர் மேற்கொண்ட முயற்சிகள் இன்னும் நடக்கவில்லை. இதன் படப்பிடிப்பை சென்னையில் அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் தொடங்கினார். ஆனால் சிலநாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், சிம்புதேவனுக்கும் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது. இனிமேல் அதில் நடிக்க மாட்டேன் என்று வடிவேலு கூறிவிட்டார்,இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு சம்மதித்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதுவரை அவர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. இதனால் படக்குழுவினர் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது. யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். தற்போது தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில் எமன் வேடத்தில் நடித்து வருகிறார் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனாலும் யோகிபாபு நடிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வடிவேலுவை மீண்டும் நடிக்க வைப்பதில் படக்குழுவினர் உறுதியாக இருப்பதாகவும், அது நடக்கவில்லை என்றால் யோகிபாபு நடிப்பது பற்றி சிந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.