ஈழன் இளங்கோவன்: “சாட்சிகள் சொர்க்கத்தில்”…

ஈழன் இளங்கோவன் இயக்கி உள்ள படம் “சாட்சிகள் சொர்க்கத்தில்”. இந்த படத்தை பற்றி அவர் கூறுகையில் “இலங்கை அகதிகள் பற்றியும், இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் பற்றிய கதையில் உருவாகி உள்ளது. இலங்கை படையினரால் கொடூரமாக கொல்லப்பட்ட பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரன், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான இசைப்ரியா ஆகியோரின் இழப்பை கருவாக கொண்டும், படையினரால் அகதிகளாய் அயல் நாடுகளில் வாழ்பவர்களின் உண்மைச் சம்பவங்களை கொண்டும் உருவான படம். இதில் பாலச்சந்திரனின் வேடத்தில் எனது மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார். இசையமைப்பாளராக சதிஷ் வர்ஷன் இருக்கிறார். ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாட்டில் படமாக்கப்பட்டு தமிழ்நாட்டில் திரை கலைஞர்களால் இந்த படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் கற்பழிப்பு,கொலை மற்றும் துன்புறுத்தும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.