Cine Bits
கஞ்சா கருப்புவின் பாலா அமீர் இல்லம் இடிக்கப்படுகிறது !
பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து போரூரில் ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு சினிமாவில் தனது குருநாதர்களாக இருந்த இயக்குனர் பாலா மற்றும் அமீரின் பெயரையே சூட்டினார். ஆனால், இடையில் கஞ்சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இதில் பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டார். பண விஷயத்தில் தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக கூறி கடன் தொல்லையில் இருந்து விடுபட வீட்டை விற்றார். னவே, கஞ்சா கருப்பின் பாலா அமீர் இல்லம் தற்போது இடிக்கப்பட உள்ளதாம். இதற்கான பணிகளும் துவங்கிவிட்டதாம். இதனால் கஞ்சா கருப்பு வேதனையடைந்ததாக தெரிகிறது.