கவலை வேண்டாம் இயக்குநரின் அடுத்த படத்தில் நயன்தாராவா?

ஜீவாவும், காஜல் அகர்வாலும் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம், ‘கவலை வேண்டாம்’.  இப்படம் இன்று உலகமெங்கும்  வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குநர் டிகே இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நயன்தாராவை சந்தித்து கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள ஒரு கதையை கூறி ஓகே வாங்கியுள்ளார். தற்போது நயன்தாராவின் அறம், கொலையுதிர்காலம், டோரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். மிகவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.