கூத்துப்பட்டறையின் முதல் வரிசை நாடகக் கலைஞன் நான் – ஜி.எம். சுந்தர் !

இயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஜி.எம்.சுந்தர். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவரான இவர், கமலின் 'சத்யா' படத்தில் நடித்தவர். சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்திலும் முகம் பதியும் அளவிற்கான பாத்திரத்தில் நடித்தவர். இப்படிச் சுமார் 70 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் திருப்புமுனையின் சதவீதம் குறைவு தான். அண்மைக் காலங்களில் வந்த 'காதலும் கடந்து போகும்' படம் இவருக்கு ஒரு பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெளியான 'மகாமுனி' படத்திலும் இவருக்கு நல்லதொரு வேடம். கூத்துப்பட்டறையின் முதல் வரிசை நாடகக் கலைஞன் நான். முத்துசாமி அவர்களின் 'நாற்காலி மனிதர்கள்' நாடகத்தில் நான்தான் நாயகன். அதுமட்டுமல்ல கூத்துப் பட்டறை அரங்கேற்றும் நாடங்களுக்கெல்லாம் நான்தான் பெரும்பாலும் நாயகன். ஆனாலும், சினிமா வாய்ப்புக்காக போராடத்தான் வேண்டியிருந்தது. 'கிழக்குக்கரை', 'பொன்னுமணி', 'அதர்மம்', 'தொட்டி ஜெயா', 'எங்க ஊரு காவல்காரன்' போன்று பல நாயகர்களுடன் பலதரப்பட்ட படங்களுடன் பலவகையான பாத்திரங்களுடன் என் திரைப்பயணம் தொடர்ந்தது. 'காதலும் கடந்து போகும் 'படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குநர் நலன் குமாரசாமி. 'மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் தனது 'மகாமுனி' படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். நம்பிக்கையுடன் எனது பயணம் தொடர்கிறது இவ்வாறு நடிகர் ஜிஎம் சுந்தர் கூறினார்.