சாய்பல்லவியை போன்ற அர்ப்பணிப்புள்ள ஒரு நடிகையை பார்ப்பது கஷ்டம் – சூர்யா !

என்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.இதற்காக சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில், சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சூர்யா, சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். நிறைய டேக் வாங்குகிறேனே என நினைத்து அழுவார். ஏதாவது ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றாலும் அழுவார். இன்னொரு டேக் கொடுத்தால் தான் சிறப்பாக நடிப்பேன் எனக் கூறி தேம்பி தேம்பி அழுவார். அப்போது செல்வராகவன் தான் அவரை ஆறுதல் கூறி தேற்றுவார். அவரது இந்த உழைப்பும், அர்பணிப்பும் தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டுவந்திருக்கிறது, என சூர்யா கூறினார்.