சிம்புவிற்கு இனி கால்ஷீட் பிரச்னையெல்லம் வராது – T.ராஜேந்திரன் அறிவிப்பு !

சிம்பு படம் நடிப்பதில் பெரும் தாமதம் ஏற்படுவதாக பல வதந்திகள் உள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு கருத்து என்று சிம்பு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. தீபன் பூபதி மற்றும் தேவராஜ் இருவரும்தான் சிம்புவின் நெருங்கிய நண்பர்கள். இவர்கள்தான் சிம்புவின் சினிமா கால்ஷீட் மற்றும் தயாரிப்பாளரிடம் பேசுவது என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சிம்புவும் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை ஆனால் தற்போது இது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. நண்பர்கள் என்பதால் அதிகம் இடம் கொடுத்து விட்டார் சிம்பு. சனி ஞாயிறுகளில் வேலை பார்க்க மாட்டார் என்றும் தயாரிப்பாளர்களுடன் தவறான ஒப்பந்தம் கொடுத்து விடுதல், அவர்களின் இந்த செயலால் தான் சிம்புவிற்கு பெரும் கெட்ட பெயரை கொடுத்தது. இந்த விஷயத்தை அறிந்த டி ராஜேந்திரன் தற்போது அவர்களை நீக்கிவிட்டு அனைத்து வேலைகளையும் தானாகவே பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவியும் தங்கை இலக்கியாவும் டி.ராஜேந்திரனும் பார்த்து கொள்கிறார்கள்.