செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்

காதல் கொண்டேன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்கள் செல்வராகவன் – தனுஷ். தொடர்ந்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இவர்கள் எப்போது மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. செல்வராகவன் – தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் தனுஷை நாயகனாக வைத்து செல்வராகவன் படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அநேகமாக இயக்குநர் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமா இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.