ஜூவாலாவுடன் இருக்கு நட்பு அடுத்தகட்டத்துக்கு செல்லுமா? – விஷ்ணு விஷால் !

நடிகர் விஷ்ணு விஷால் 4 ஆண்டுகள் காதலித்து மணந்த மனைவியை கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக செல்பி எடுத்து அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்பி குறித்து விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, எனக்கு ஜூவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். எனக்கு ஜூவாலாவை பிடிக்கும். அதுபோல் ஜூவாலாவுக்கும் என்னை பிடிக்கும். எங்களுக்கு பொதுவான நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுகிறோம். எங்கள் தொடர்பு இதை தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்லுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. இருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறோம் என்றார். இதிலிருந்து காதலை அவர் மறுக்கவில்லை என்பதால் காதலிப்பது உண்மைதான் என்று பேச்சு கிளம்பி இருக்கிறது.