தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் அமிர்தபச்சன்.

சூரியாவின் “தானா சேர்ந்த கூட்டம்” படம் அடுத்த வரம் வெளியாகவுள்ளது. இவர் இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். மீண்டும் இந்த பதத்தில் கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யா 'அயன், மாற்றான் படங்களை அடுத்து மீண்டும் இணைய உள்ள படத்தில் ஹிந்தி நடிகரான அமிதாப்பச்சனை நடிக்க வைக்க இப்போதே பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துவிட்டார்களாம். அமிர்தபச்சன் இதுவரை தமிழ்ப் படங்கள் நடித்தது இல்லை.
சிரஞ்சீவி நடிக்கும் “சைரா” என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகம் பக்கம் வருகிறார். தமிழ்ப் படத்தில் அவரை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்று சூர்யா, கே.வி.ஆனந்த் தரப்பு முயற்சித்து வருகிறார்களாம். தமிழ்ப் படங்கள் மீதும், தமிழ்க் கலைஞர்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்தால் அந்த படம் இந்திய அளவில் கவனிக்கப்படும் படமாக அமையும் எதிர்பார்க்கப்படுகிறது