தளபதிக்கு வில்லனாகி விட்டேன் தல க்கு வில்லனாக காத்திருப்பேன் S.J.சூர்யா !

தமிழ் சினிமாவில் அஜித்தின் வாலி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா அடுத்த படமே தளபதி விஜய் வைத்து குஷி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார், இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. அதேபோல் ஸ்பைடர்மேன் படத்தில் வில்லனாக அறிமுகமான எஸ் ஜே சூர்யா விஜயின் மெர்சல் படத்தில் வில்லனாக நடித்திருந்தார், சமீபத்தில் அவர் நடித்த மான்ஸ்டர் படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார் அதில் எஸ் ஜே சூர்யா கூறியதாவது, முதலில் அஜித்தை வைத்து இயக்கினேன் அதன்பிறகு விஜய் படத்தை இயக்கினேன் ஆனால் நடிக்கும்போது விஜய் படத்தில் நடித்து விட்டேன் அதேபோல் அஜித் படத்தில் நடிக்க வேண்டும் அஜித் படத்தில் எனக்கான கதாபாத்திரம் அமைய வேண்டும் என கூறியிருந்தார்.