தொழிலதிபராக மாறவிருக்கிற தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படத்திற்கு பிறகு எந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. படங்கள் எதுவும் கிடைக்காததை உணர்ந்து கொண்ட தீபிகா படுகோனே, அடுத்த கட்ட நடவடிக்கையாக சுயமாக ஒரு தொழிலை தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடு செய்ய இருக்கிறாராம். அதில் பங்குதாரராக கணவர் ரன்வீர்சிங்கை சேர்க்கவில்லை. தன்னுடைய தாய்வீட்டு உறவினர்களின் ஒத்துழைப்போடு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். இதற்காக தன்னுடைய சக நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம், என்ன தொழில் தொடங்கலாம்? எந்த தொழில் செய்தால் லாபம் பார்க்க முடியும்? என்பது போன்ற ஆலோசனைகளை கேட்டுவருவதாக கூறுகிறார்கள். விரைவில் தீபிகா படுகோனேவை ஒரு தொழிலதிபராக பார்க்கலாம் என்கிறார்கள்.