நடிகர் விஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி ஓனர் கைது!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது தந்தை ஜிகே ரெட்டி. இவர், பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கான ராக்ஷஸி என்ற படத்தில் ராதாரவி கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் நேத்ரா என்ற படத்திலும் நடித்துள்ளார். பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: தனது குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி ஆகியவற்றை தருவதாக கூறி மதுரையைச் சேர்ந்த கல்வாரி உரிமையாளர் வடிவேலு என்பவர் ரூ.86 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அவர் குறிப்பிட்டபடி கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி தராமலும் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது. ஜிகே ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வடிவேலுவை அழைத்து முதலில் விசாரணை நடித்தியுள்ளனர். விசாரணையைத் தொடர்ந்து மோசடி வழக்கில் வடிவேலுவை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து வடிவேலுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.