நடிப்பிற்காக பொறியியல் பட்டதாரியான ஜிப்ஸி நடிகை !

‘ஜிப்ஸி’ நாயகி நடாஷா சிங் பொறி­யி­யல் துறை­யில் பட்­டம் பெற்­ற­வர். சிறு வயது முதலே சினிமா­வில் நடிக்க வேண்­டும் என்று ஆசை­யாம். வளர்ந்து ஆளான பிற­கும் ஆசை பெரி­தா­னதே தவிர, குடும்­பத்­தா­ரின் அனு­மதி மட்­டும் கிடைக்­க­வில்லை. நீண்ட போராட்­டத்­துக்­குப் பிறகு பட்டப்­ப­டிப்பை வெற்­றி­க­ர­மாக முடித்­தால் நடிக்­க­லாம் என்று வீட்­டார் அனு­மதி கொடுத்­துள்­ள­னர். இந்த ஒரு கார­ணத்­துக்­கா­கவே கஷ்­டப்­பட்டு படித்து பட்­டம் பெற்­றேன். வீட்­டி­லும் சினி­மா­வில் நடிக்க மகிழ்ச்­சி­யாக ஒப்­புக்கொண்­ட­னர். ஆனால் எங்கே சென்று வாய்ப்பு கேட்க வேண்­டும், யாரைத் தொடர்­பு­கொள்ள வேண்­டும் என்­ப­தெல்­லாம் எனக்­குத் தெரி­யாது. சினிமா வாய்ப்­புக்­காக காத்­தி­ருந்த போது தான் விளம்­ப­ரப் படங்­களில் நடிக்­கும் வாய்ப்­பு­கள் தேடி வந்­தன. மாட­லிங் துறை­யில் எனக்கு பாராட்­டு­கள் கிடைத்தபோதி­லும், எனது துறை என்­பது சினிமா தான் என்­ப­தில் தெளி­வாக இருந்­தேன், என்று சொல்­லும் நடாஷா, கடந்த 2015ஆம் ஆண்டு ‘மிஸ் இமாச்சல பிர­தே­சம்’ போட்­டி­யில் அழ­கிப் பட்­டம் பெற்­ற­வர். இதை­ய­டுத்து வேறு சில அழ­கிப் போட்டிகளி­லும் பட்­டங்­களை வென்­றுள்­ளார். இந்­நி­லை­யில் தனது மேலா­ளர் மூலம் ‘ஜிப்ஸி’ படத்துக்கு நடி­கர், நடி­கை­கள் தேர்வு நடப்­ப­தாகக் கேள்­விப்­பட்­டா­ராம். ராஜு முரு­கன் படம் என்றதும் ஆர்­வம் ஏற்­ப­டவே, மும்­பை­யில் நடந்த அந்­தத் தேர்­வில் பங்­கேற்­றுள்­ளார்.