நேர்கொண்டப்பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்தது !

இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இதில் அஜித் ஜோடியாக வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். அஜித்குமார் வக்கீலாக வருகிறார். 3 பெண்கள் ஒரு பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வாதாடுகிறார் அஜித்குமார். இதனால் அந்த பெண்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன. அவற்றில் இருந்து காப்பாற்றி கோர்ட்டு மூலம் அந்த பெண்களுக்கு எப்படி நியாயம் கிடைக்க செய்கிறார் என்பது கதை. இந்த படத்தில் தாடி மீசையுடன் வக்கீலாக அஜித் நடித்த காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. பின்னர் தாடியை எடுத்து வித்யாபலனுடன் நடித்த காட்சிகளை எடுத்தார்கள். படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியது. விரைவில் அஜித் இப்படத்திற்கு டப்பிங் பேசவுள்ளார், பணிகள் முழுதும் நிறைவடைந்த பின் படத்தை ஆகஸ்ட் 10 தேதியில் ரிலீஸ் செய்யப்படுமென படக்குழு அறிவித்துள்ளது.