படத்தை தயவுசெய்து திரையரங்கில் பாருங்கள் – சந்தானம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் !

சர்க்கிள் பாக்ஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ஏ1. இப்படம் வரும் ஜூலை 26ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார். இப்படத்தின் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். நடிகர் சந்தானம் பேசும்போது, ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன். 2000ம் ஆண்டு டீவில அறிமுகமான நான் இப்போ வரைக்கும் ஓரளவு தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. படத்தை தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.