Cine Bits
பெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்கவேண்டும் – பாடகர் ஜேசுதாஸ் வேண்டுகோள் !

சென்னையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் யேசுதாஸ் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் ஐயப்பனை ஒன்றும் செய்யாது எனவும் ஆனால் விரதம் இருந்து வரும் பக்தர்களின் கவனம் திசைதிரும்பும் எனவும் குறிப்பிட்டார். இதன் காரணமாக பெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். காலமாற்றத்திற்கு ஏற்ப ஆண்களை போல பெண்களும் சபரிமலைக்கு செல்ல வேண்டுமென நினைவுக்கின்றனர் எனவும் சபரிமலையை தவிரத்து மற்ற கோயில்களுக்கு பெண்கள் செல்ல வேண்டுமென யேசுதாஸ் கூறினார்.