பேயாக களமிறங்கும் மற்றுமொரு காமெடி நடிகர்!

காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் ‘பட்டிபுலம்’ படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சேரன் ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கூறும்போது, ‘நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். யோகி பாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன்படுத்திக்கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை, படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி இருக்கிறார். இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம். படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம்.