மம்முட்டியால் தேசிய விருது கிடைக்கும்: சரத்குமார்

ராம் இயக்கிய “பேரன்பு” படத்தில் மம்முட்டி நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை  பற்றிய தகவல்கள்  கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் பரவிவருகிறது. இவரும், சரத்குமாரும், ‘பழசிராஜா’ படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை குறித்து சரத்குமார் கூறுகையில் ” இந்த கதையை ராம் என்னிடம் சொன்னபோது 'அமுதன்' கதாபாத்திரத்தில் மம்முட்டியால் மட்டுமே நடிக்க முடியும் என்றும், அவர் மூலம் இந்த படம் தேசிய விருது பெரும் என உறுதியாக சொல்வேன்” என நம்பிக்கையாக கூறியுள்ளார் அவர்.