மீண்டும் இந்தி திரைப்படத்தை இயக்கும் பிரபுதேவா

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. தமிழில் வெற்றி பெற்ற ‘போக்கிரி’ படத்தை ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் மறுதயாரிப்பு செய்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையுவுள்ளனர். ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.