Cine Bits
மீண்டும் திகில் படத்தில், ஹன்சிகா

நடிகைகள் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா மாயா, ஐரா ஆகிய பேய் படங்களில் நடித்தார். இரண்டிலுமே அவர் பேயாகவும் வந்தார். நடிகை ஹன்சிகா ஏற்கனவே அரண்மனை-2 பேய் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அவரது 50-வது படமான மஹாவும் திகில் கதையாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இன்னொரு திகில் படத்திலும் ஹன்சிகா ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் டைரக்டு செய்கிறார்.