Cine Bits
மீண்டும் பா.ரஞ்சித்துக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது! முக்கிய ரோலில் பிரபல இயக்குனர்.

பா.ரஞ்சித் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். தற்போது இவர் இயக்கியா கபாலி படம் பிரமாண்ட வசூல் ஈட்டியதால், சூப்பர்ஸ்டார் ரஜினியை மீண்டும் இயக்கும் இரண்டாவது வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்தது. முழுக்க முழுக்க மும்பையில் படமாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 28ம் தேதி துவங்கவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். பா.ரஞ்சித் தன் முதல் இரண்டு படங்களில் நடித்தவர்களுக்கு தான் கபாலி படத்தில் வாய்ப்பு கொடுத்திருந்தார். ஆனால் தற்போது இந்த புதிய படத்தில் அவர்கள் யாருக்கும் இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.