Cine Bits
ரீ-என்ட்ரி கொடுக்கும் சீதா !

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் தங்க மகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சீதா அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதுகுறித்து சீதாவிடம் கேட்டபோது, அவரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் கோவாவில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகை சீதா ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் அக்டோபரில் வெளிவரும் என தெரிகிறது.