Cine Bits
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் ‘மகாவீர் கர்ணா’ தொடக்கம்!

ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விக்ரமை கதாநாயகனாக கொண்டு தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் மகாவீர் கர்ணா படத்தை மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இயக்குகிறார், 32-க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது. மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத் ராமோஜி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஐதராபாத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.