வைபவ் அடுத்த படம் சிக்ஸர்!
`மேயாத மான்' படத்திற்கு பிறகு வைபவ் `பேட்ட' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக `ஆர்.கே.நகர்', `காட்டேரி' ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன. இந்த நிலையில், வைபவின் அடுத்த படத்திற்கு `சிக்ஸர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும் இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது. க்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பல புள்ளிகளை இது இணைக்கிறது என்று தயாரிப்பாளர்கள் கூறினர். ஜிப்ரான் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.