இலங்கை செல்ல​ ரஜினிக்கு எதிர்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக கட்டியிருக்கும் 150 வீடுகள் கட்டியுள்ளார்.அதை திறந்து வைக்க ரஜினிகாந்த் இலங்கை செல்ல​ இருந்தார்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வேண்டாம் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது.
 
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார் என்பது லைகா நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டது.

தமிழ் மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கை கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்பதை தவிர்க்க முடியவில்லை.

ஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளிவெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.லைகா நிறுவனத்துக்கும், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகிற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணுகிறது.

இவ்வாறு திருமாவளவனின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.