நடிகை ராதிகா, சரத்குமாரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

சீரியல் உலகில் முன்னிலையில் இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். பல சீரியல்களில் நடித்தும், தயாரித்தும் வருகிறார். ராடன்ஸ் மிடியா நிறுவனத்தை தன் கணவர் சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் அவர்கள் சில படங்களையும் தயாரித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர்கள் அண்மையில் ரூ 2 கோடிக்கு செக் கொடுத்ததாகவும். அது பவுன்ஸ் ஆகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை உயர்நீதிமன்றம் சரத்குமார், ராதிகா, ஸ்டீபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை வரும் ஜூலை 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.