மாஸ் ஹீரோவாக களமிறங்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி
தெலுங்கு திரையுலகின் சரித்திர நாயகன் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான “சைரா நரசிம்ம ரெட்டி” திரைப்படம் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. மொழிகடந்து இந்தியா முழுதும் உள்ள பில்லியன் கணக்கான ரசிகர்களையும் படம் கவர்ந்திருக்கிறது. “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் போர்வீரனாக கலக்கிய சிரஞ்சீவி தன் அடுத்த படத்தில் மாடர்ன் மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். பிரபல இயக்குநர் கொரட்டாலா சிவா இப்படத்தினை இயக்குகிறார். இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள மிக எளிய முறையில் படத்திற்கு பூஜை போடப்பட்டது. மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்திற்கு ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, திரு ஒளிப்பதிவு செய்கிறார். சிரு152 (chiru152) என்றழைக்கப்படும் இப்படத்தினை Konidela Production Company உடன் Matinee Entertainments இணைந்து தயாரிக்கிறார்கள். இயக்குநர் கொரட்டாலா சிவா இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் முதல்முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.