1,500 கோடி செலவில் 3D யில் தயாராகும் ராமாயணம் – சீதா கதாபாத்திரத்தில் நயன்தாரா !

ராமாயண காவியத்தை 3டி’யில் எடுக்க தயாராகியுள்ளனர் பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த். இந்த படத்தை இந்தியில் தங்கல் படத்தை இயக்கி பிரபலமான நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. முதல் பாகம் 2021-ல் வெளியாகிறது..